ஒட்டன்சத்திரம், டிச. 27: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட தமிழக அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 288 பகுதி நேரக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகளில் உள்ள 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 2022 வழங்கப்படவுள்ளது.