ஒட்டன்சத்திரம் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அமைச்சர் திடீர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், டிச. 27: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட தமிழக அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 288 பகுதி நேரக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகளில் உள்ள 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 2022 வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திண்டுக்கல் எம்பி ப.வேலுச்சாமி, கலெக்டர் ச.விசாகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், கோட்டாட்சியர் ஆனந்தி, வட்டாட்சியர் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: