கீழக்கரை, டிச.25: திருப்புல்லாணி ஒன்றியத்தில் பலவீனமாக உள்ள 41 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பள்ளியில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்து காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த, பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்களை உடனடியாக இடிக்க அரசு உத்தரவிட்டது.