திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர் வனஜா மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மண்டல அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் கலந்து கொண்டு மறைந்த வனஜா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.