அம்மாபேட்டையில் வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல்

தஞ்சை,டிச.25: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மகிமாலை கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் வந்துள்ளனர். தொடர்ந்து அந்த 4 பேரும் சேர்ந்து கார்த்திக்கை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திக் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கிய மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: