விராலிமலை, டிச. 25: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உழவாரப் பணி மேற்கொண்டனர். விராலிமலை முருகன் மலைக்கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் மலைமேல் உள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிப்பது இக்கோயிலில் தனி சிறப்பு என்றால் தேசிய பறவையான மயில்கள் இம்மலையில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது மேலும் சிறப்பாகும். இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாகும்.