தென்னம்பாளையத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

திருப்பூர், டிச. 23: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் துவக்கி வைத்தார்.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் 50வது வார்டு, கோபால் நகர் 51வது வார்டு, 57 வார்டு, ஐயன் நகர் 56வது வார்டு, முத்துச்சாமி நகர் 47வது வார்டு ஆகிய பகுதிகளில் கடந்த பல வருடங்களாக சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து சாலை சீரமைக்க கோரிக்கை எழுந்தது. இதன்படி நேற்று தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2021-22 ன் கீழ் சுமார் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைக்க தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: