திமுக இளைஞரணி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

அருப்புக்கோட்டை, டிச.22: அருப்புக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம்  மற்றும் அருப்புக்கோட்டை திமுக இளைஞரணி சார்பில் திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு  முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி வரவேற்றார். நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் அழகுராமானுஜம், தங்கமணி கலந்துகொண்டனர். முகாமில் கண் மருத்துவர்கள்  பயனாளிகளுக்கு கண் பரிசோதனையும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றின் தன்மை கொண்டு உரிய மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டனர். இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள், திமுக தொண்டர்களும்  கலந்து கொண்டனர்.

Related Stories: