ஊட்டி, டிச.22:நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசு ஐடிஐயில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளான பிட்டர், டர்னர், மின்னனுவியல் கம்மியர் ஆகிய இரு ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தச்சர், வெல்டர் ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினரை சார்ந்த மாணவ, மாணவியர் பயிற்சியில் சேரலாம்.