அரசு ஐடிஐயில் நேரடி மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

ஊட்டி, டிச.22:நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில்  நடப்பு ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள்  இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.  பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசு ஐடிஐயில் பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளான பிட்டர்,  டர்னர், மின்னனுவியல் கம்மியர் ஆகிய இரு ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கும்,  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தச்சர், வெல்டர் ஓராண்டு  தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினரை சார்ந்த மாணவ, மாணவியர் பயிற்சியில் சேரலாம்.

இம்மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்காக  கூடலூரில் இயங்கும் கூடலூர் அரசு ஐடிஐயில் பிட்டர், மோட்டார் வண்டி  கம்மியர், வயர்மேன், வெல்டர், பிளம்பர் ஆகிய ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் சேரலாம். மேலும்,  விவரங்களுக்கு 0423-2231759, 0426-2263449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: