மன்னார்குடி, டிச. 20: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பித்து இருந்தவர் களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் கணினி வழித்தேர்வு மன்னார்குடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்ட ங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் 1முதல் 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2 தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகிறது.12 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் தன்னார்வலர்களுக்கான கணினி வழி தேர்வு நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக மன்னார்குடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் 65 தன்னார் வலர்கள் கலந்து கொண்டனர். கணினி முன் அமர்ந்து 50 வினாக்களுக்கு விடை யளித்தனர்.