பொன்னேரி. டிச.18: மீஞ்சூர் ஒன்றியம், தத்தமஞ்சி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் தத்தமஞ்சி ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாண சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருள்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சரசு வரவேற்றார்.