முத்துப்பேட்டை ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

முத்துப்பேட்டை,டிச.18: முத்துப்பேட்டை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீரப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில எழுத்தறிவு விருது பெற்ற கோவிலூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் புஷ்பவள்ளி, மாவட்டதில் அதிக மாணவர் சேர்க்கை பெற்ற புதுத்தெரு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டப்பட்டது. இதில் வரும் 26ம்தேதி அன்று திருவாரூரில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் பொறுப்பாளர;கள் அனைவரும் கலந்துக்கொள்வது, உறுப்பினர் சேர்க்கை ஜனவரி மாதம் நிறைவு செய்வது, மாநில தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ரவிக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணைச்செயலாளர் வீரமணி வரவேற்றார். முடிவில் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Related Stories: