நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட்ட அம்மாசிமட தெருவில் உள்ள குடியிருப்போர் சார்பாக, அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மீனாட்சிபுரம் அம்மாசிமட தெரு, ஆசாரிமார் தெற்கு தெரு, பத்தல்விளை, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகம் ஆகும். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் அம்மாசிமட தெருவில் உள்ள ஒரு வீட்டில், தனியார் நிறுவனம் செல்போன் டவர் நிறுவும் பணியை மேற்ெகாண்டு வருகிறார்கள். செல்போன் டவரால் பல்வேறு வித பாதிப்புகள் ஏற்படுகின்றன.