சாத்தான்குளம் அருகே 20 மூடை ரேஷன்அரிசி, ஆம்னிவேன் பறிமுதல்

சாத்தான்குளம், டிச. 16: சாத்தான்குளம் அருகே கடத்த முயன்ற 20 மூடை ரேஷன்அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். சாத்தான்குளம் தாலுகா பழங்குளம் கிராமம் கருவேலம்பாட்டில் நேற்று காலை சுமார் 10 மணிஅளவில் நியாய விலைக் கடையிலிருந்து அரிசி கடத்தப்படுவதாக சாத்தான்குளம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அலுவலர் மைக்கேல்  உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது அறிவான்மொழி - பழங்குளம் செல்லும் சாலையில் ஆம்னி வேன் டிரைவர் இல்லாமல் நின்றது. வாகனத்தை  தணிக்கை செய்யப்பட்டதில் அதில் 50 கிலோ எடை கொண்ட 20 மூடைகளுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடன் வருவாய்த்துறையினர் ரேஷன்அரிசி மூடை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். ரேஷன்அரிசி  எங்கிருந்து கடத்தப்படுவது குறித்தும், கடத்தலில் ஈடுபட்டது யார்? என வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: