காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் அகல் விளக்கேற்றி நெய் தீபம் போட்டு பக்தர்கள் வழிபட்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மனையும் தரிசித்து செல்கின்றனர். அவர்கள், இக்கோயிலில் உள்ள 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமரத்தை சுற்றி வழிபடுகின்றனர்.