மன்னார்குடி, டிச. 14: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நூற்றாண்டுகளை கடந்த பழமை யான அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர் கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இதன்முலம் தங்களுக்கு கல்வி போதித்த பள்ளிக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்து தருவத ற்கு முன்னாள் மாணவர்கள் திட்ட மிட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பள்ளியின் முன்னாள் உதவி தலைமையாசிரியர் செல்லையா தலைமையில் அரசு உதவிபெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. பள்ளி தாளாளர் ஸ்டேன்லி, மனித உரிமை ஆணைய பிரிவு அரசு வழக்கறிஞர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.