நெல்லை, டிச.14: நெல்லை அருகே நடராஜபுரத்தில் மின்னல் தாக்கி இறந்த பெண்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலப்பாளையம் நடராஜபுரத்தை சேர்ந்த வீ.முருகன் கலெக்டரிடம் நேற்று அளித்த மனு: மேலப்பாளையம் 44வது வார்டில் குடியிருந்து வரும் எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். கடந்த 5ம் தேதி எனது மனைவி முத்துமாரி, என் தாய்மாமன் முருகன் என்பவரின் மனைவி பாலேஸ்வரி ஆகியோர் கருங்குளம் அருகே வயலில் நாற்று நடும்போது மின்னல் தாக்கி இறந்தனர்.