திருவெறும்பூர், டிச.13: திருவெறும்பூர் அருகே தனியார் பைனான்ஸ் ஊழியரை மிளகாய்ப்பொடி தூவி வெட்ட முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே மேலகல்கண்டார்கோட்டை மணியம்மை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டமுருகன்(22), தனியார் பைனான்ஸ் ஊழியர். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தனது நண்பர் மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த இளந்தமிழ்(21) என்பவருடன் பைக்கில் ஆலத்தூர் ஆஞ்சநேயர் கோயில் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது மணிகண்டமுருகனுக்கு தெரிந்த ஆலத்தூர் பூங்கோயில் தெருவை சேர்ந்த ஆகாஷ்(24), மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த சரத்(20) மற்றும் ஒருவர் அவரை அழைத்துள்ளனர்.