சாயர்புரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஏரல், டிச. 13: சாயர்புரம் தூய மேரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. சாயர்புரம் சேகரகுரு டேனியல் ஞானபிரகாசம் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் அகதாஸ் ராஜ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தூத்துக்குடி தொழிலதிபர் பிரேம் பால்நாயகம் கிறிஸ்துமஸ் வெகுமதிகளை வழங்கி பேசினார். விழாவில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஆக்னஸ் மெர்ஸி நன்றி கூறினார்.

Related Stories: