நாகமலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

திருப்பரங்குன்றம், டிச.11: நாகமலை புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் துவங்கிய பேரணியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 கி.மீ தூரம் வரை சென்றனர்.

இந்த பேரணியை மதுரை மண்டல சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி துணைத்தலைவர் சந்தோச பாண்டியன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, வட்டார மருத்துவர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: