திருப்பரங்குன்றம், டிச.11: நாகமலை புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் துவங்கிய பேரணியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 கி.மீ தூரம் வரை சென்றனர்.