திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெங்கத்தூரில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. இதற்கிடையே அக்கோயிலுக்கு அழகிய மண்டபம் மற்றும் வர்ணம் பூசப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதற்கு முன்னதாக இரண்டாம், மூன்றாம் காலபூஜை, சாமதேவ சமர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 4ம் கால பூஜை, வேதமந்திர ஹோமம், மஹாபூர்ணாஹூதி, ஆலய ப்ரதசனம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் கலசத்தில் அர்ச்சகர்கள் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதைத் தொடர்ந்த அந்த புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.