கழுகுமலை.டிச.11: கழுகுமலை ஏபிசி நகரை சேர்ந்தவர் சுப்பையா (60). இவர் கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களது மகன் வைரமுத்து, சென்aனையில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் கார்த்திகா ஆந்திராவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு திருப்பதியில் கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக சுப்பையாவும், ராமலட்சுமியும் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருப்பதி புறப்பட்டு சென்றனர்.