தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், டிச. 9: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், வரும் 11ம்தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு தொழிற்பயிற்சி பெற்றவர்களும் கலந்துகொண்டு பணி வாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்கும் அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய சுயவிபரம், உரிய கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: