ஆலங்குடி, டிச. 9: திருவரங்குளம் வேளாண்மை விரிவாக்க மையம் சார்பாக உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் களங்குடி கிராமத்தில் கலைஞர் திட்டம் தொடர்பான உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது.துணை வேளாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தபயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி துறையின் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேல் மண்வளம் குறித்தும் மண்ணில் சத்துக்கள் மற்றும் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார். மேலும் மண் மாதிரிகள் சேகரிக்கும்போது ஏ வடிவம் போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி 15 செ.மீ அல்லது 23 செ.மீ பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும் இவ்வாறாக குறைந்தபட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள், மண் மாதிரி சேகரிக்க வேண்டிய காலம், கால குறைப்பு முறை பற்றியும், மாதிரி எடுக்கும் ஆழம் பற்றியும் பேசினார்.