புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி

சேந்தமங்கலம், டிச.5: புதுச்சத்திரம் ஒன்றியம் எஸ். உடுப்பம் ஊராட்சி ஆர்.சி.கொசவம்பட்டியில், புனித சவேரியார் ஆலயத்தின் திருவிழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி மற்றும் ஜெபக் கூட்டங்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருப்பலிக்கு உடும்பம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் சேலம் ஆயர் மற்றும் நாமக்கல் மறைவட்ட குருக்கள் டாக்டர் அருள்செல்வம் ராயப்பன் கலந்துகொண்டு திருப்பலி செய்தார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இரவு தேர் பவனி நடந்தது. நேற்று சிறப்பு திருப்பலியும், கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories: