மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் வென்ற 2 மாணவர்கள் துபாய் பயணம்

கிருஷ்ணகிரி, டிச.5: மாநில அளவில் நடந்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவரும், மாணவியும் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் இணையவழியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி-வினா போட்டி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 274 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

 இதில், ஓசூர் சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீஷா மற்றும் மாணவர் தினேஷ் வெற்றி பெற்றனர். இருவரும் இம்மாதம் துபாய் நகரத்திற்கு (ஐக்கிய அரசு அமீரகம்) அரசு செலவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களை போல், பிற மாவட்டத்தை சேர்ந்த, 87 மாணவர்கள் அரசு செலவில் துபாய் செல்ல உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாணவி ஸ்ரீஷா மற்றும் மாணவர் தினேஷ் இருவர் மட்டுமே வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமுருகன், பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பா, வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிநாராயணா, கோவிந்தப்பா, ஓசூர் மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

Related Stories: