விருதுநகர் சதுரகிரியில் பக்தர்களின்றி சிறப்பு பூஜை

வத்திராயிருப்பு, டிச.5: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.    மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. தொடர்மழை இப்பகுதியில் பெய்து வருவதால், கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கார்த்திகை அமாவாசையான நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் கோயிலுக்குச் ெசல்ல அனுமதிக்கப்படவில்லை.இதன் காரணமாக அவர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் கொளுத்தி சாமி தரிசனம் செய்து சென்றனர். கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால்,பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் பக்தர்களின்றி நடைபெற்றது. 

Related Stories: