திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்தூர், டிச. 5: திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நேற்று துவங்கியது. முன்னதாக யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யோக பைரவர் விபூதி அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், வெண் பூசணிக்காயில் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செய்து வழிபாடு நடத்தினர். இதுபோல் டிச.9ம் தேதி வரை தினந்தோறும் சம்பவ சஷ்டி வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்கள் அபிஷேக பொருட்களை தேவஸ்தான அலுவலகத்தில் வழங்கலாம்.

Related Stories: