சின்னாளபட்டி, டிச. 5:வத்தலக்குண்டு மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக துணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் மத்திய வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் பேசியதாவது: ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் பயிர்க்கடன் மட்டும் ரூ 5.00 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.