பூந்தமல்லி, டிச.4: கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 147வது வார்டு ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளியில் முழங்கால் அளவிற்கு நீச்சல் குளம்போல் காட்சியளித்து மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், பள்ளி வளாகம் மட்டுமின்றி வகுப்பறைகள், சத்துணவு கூடம், மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.