குளித்தலை, டிச. 4: கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று நெய்தலூர் காலனி பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (55) என்பவர் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த போது போலீசார் கைது செய்தனர். அதேபோல் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (57) என்பவர் டீக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த போது போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரிடமிருந்து மொத்தம் 46 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.