நெய்வேலி, ஏப். 15: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-5ல் வசித்து வருபவர் ஜான்பால் ராஜ். இவரது தாயார் சவுரி அம்மாள்(70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வட்டம்-10ல் ராமலிங்க அடிகளார் கோயில் அருகே நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சவுரி அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்பேரில் நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் டெல்டா போலீஸ் உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.