பொன்னேரி, ஏப். 15: பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். பழவேற்காடு தோனிரவு பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (23) என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் திருப்பாலைவனம் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தினர். அப்போது, மனைவியின் நடத்தையில் பிரவீன்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த நவம்பர் 20ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், மனைவியை தலையணை மூலம் அழுத்தி பிரவீன்குமார் கொலை செய்தார். இதுெதாடர்பாக திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், ஜாமீனில் வெளிவந்தார். காட்டாவூரில் தனது குடும்பத்தினருடன் தங்கினார்.