பள்ளிப்பட்டு, ஏப். 15: பள்ளிப்பட்டு பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர்களை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் தொடர் வழிப்பறி, வீடுகளில் கொள்ளை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இதை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இதைதொடர்ந்து போலீசாரின் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த மாதம் 19ம் தேதி அதிகாலை பள்ளிப்பட்டு அருகே ஆர்கே பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி, நகை, பணம் இருந்தது.