அரியலூர்,ஏப்.14: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் (பகுதியளவு) சட்டமன்ற தொகுதிகளில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றிய காவல்துறையினருக்கும் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்கள் வாக்களிக்க சிறப்பாக பணிபுரிந்த தன்னார்வ என்எஸ்எஸ் மாணவர்களுக்கும் அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பாராட்டு சான்றுகளை வழங்கி பாராட்டினார்.