நாகை,ஏப்.14: நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். நியாயவிலை கடைகளுக்கு புழுங்கல் அரிசி 3 ரகமாக வழங்காமல் ஒரே ரகமாக வழங்க வேண்டும். திருக்குவளை வட்டம், வடக்கு பனையூர் மற்றும் திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.