திருப்பூர், ஏப். 13: திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, மக்களிடம், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்மக்கள் வசதிக்காக பல இடங்களில், முகக்கவசம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.