திருப்பூர், ஏப். 13: திருப்பூரில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களை இரட்டிப்பாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் கோபாலிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. எனவே பரிசோதனை முடிவை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 முதல் 3 நாட்களுக்கு பின் தான் முடிவுகள் சொல்லப்படுகிறது. இதனால் டெஸ்டிங் கொடுத்துவிட்டு பொதுமக்கள் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் வெளியே செல்லும் அவலம் உள்ளது.