நீடாமங்கலம், ஏப்.13: நீடாமங்கலம் அருகே ஆதனூரில் வேளாண் மாணவிகளுக்கு தென்னை வேரூட்டப் பயிற்சி நடந்தது. தஞ்சாவூர் வேளாண் கல்லூரியில் நான்காமாண்டு படிக்கும் மாணவிகள் இந்துமதி, ஐஸ்வரியா, ஜமுனா ராணி, மெரின் ரபின்யா, மோனிஷா, நர்மதா,பிரணவமஞ்சரி, ரம்ளத் பேகம், சாய்லெட்சுமி, செல்வபாரதி ஆகியோர் கிராம பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் செயல்விளக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி நீடாமங்கலம் அருகே ஆதனூரில் மாணவிகள் தென்னை வேர் ஊட்டச் செயல்முறை குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் ஆதனூர் விவசாயிடம் பயிற்சி பெற்ற்னர்.