ஆண்டிபட்டி அருகே டூவீலர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி முளைப்பாரி ஊர்வலத்தில் சென்ற போது பரிதாபம்

ஆண்டிபட்டி, ஏப். 13: ஆண்டிபட்டி அருகே டூவீலர் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (31). இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பிச்சம்பட்டிக்கு வந்திருந்தார். திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் சரவணன் பின்னால் நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்தவர்கள் சரவணன் மீது கண்இமைக்கும் நேரத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணனை உடனே மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: