கோவில்பட்டியில் தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

கோவில்பட்டி, ஏப்.12: கோவில்பட்டியில் தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார். தென்காசி மாவட்டம் வெள்ளாளங்குளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் வெங்கடேஷ்வரன் (25). இவர், கோவில்பட்டி ராஜுவ்நகர் 3வது தெருவில் உள்ள தனது சகோதரி மகேஷ்வரியின் வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் வரும் போது திடீரென்று பைக் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த வெங்கடேஷ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: