வெப்படை வாரச்சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிகள்

பள்ளிபாளையம், ஏப்.12: வெப்படையில் நேற்று கூடிய சந்தையில், கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் காற்றில் பறந்தன.பள்ளிபாளையம் ஒன்றியம் வெப்படையில் நேற்று வழக்கம் போல சந்தை கூடியது. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தையில் திரண்டு அத்தியாவசிய பொருள்கள், மளிகை, காய்கறிகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்கு வந்த வியாபாரிகள் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் இருந்தனர். மேலும் கடைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கொரோனா விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் அலை மோதினர்.தற்போது கொரோனா 2ம் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இனி வரும் நாட்களில் சந்தைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: