கம்பம், கூடலூரில் சிறுமிகள் மாயம்

கம்பம், ஏப். 10: கம்பம் திருவள்ளுவர் காலனி ரேஞ்சர் ஆபீஸ் ரோடு ஆட்டோ ஓட்டுநர் சுந்தர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு  கடந்த 5 ஆம் தேதி 17வது பிறந்த நாள். அன்று பெற்றோரிடம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சுந்தரிடம் அவரது  மனைவி தகவல் தெரிவிக்கவே, அவர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுபற்றி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சுந்தர் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்.ஐ ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

இதுபோல் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் இளங்கோவன். இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஏப். 7ல் தனது தாயாரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால்  கூடலூர் தெற்கு  காவல்நிலையத்தில் இளங்கோவன் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்ஐ பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.

Related Stories: