சின்னாளபட்டி, ஏப். 10: சின்னாளபட்டி பிரிவில் மதுரையிலிருந்து வரும் பஸ் மற்றும் வாகனங்களை செயல் அலுவலர் கலையரசி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சின்னாளபட்டிக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், உட்பட தென்மாவட்டங்களிலிருந்து நூற்றுகணக்கானோர் ஜவுளி எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலிருந்து அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தூய்மை ஆய்வாளர் கணேசன், தூய்மை மேற்பார்வையாளர்கள் சரவணன், அகிலன், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வரும் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.