கொடைக்கானலில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணியால் அவதி

கொடைக்கானல், ஏப்.10: கொடைக்கானலில் பாம்பார்புரம் பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல கூடிய நகராட்சிக்கு சொந்தமான  முக்கிய சாலையான பாம்பார்புரம்  பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை  கடந்த  அவசரமாக சாலைப் பணி துவங்கப்பட்டது.

இப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. சிறு மழை பெய்தாலும் மறுநாளே சாலை பெயர்ந்து போகும் அளவில் இருந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை என்ற பெயரில் மக்களின் வரி பணம் வீணடிக்கப்படுவதுடன் பாதியில் சாலைப்பணியை விட்டதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: