மாணவி பாலியல் பலாத்காரம் பெயிண்டர் போக்சோவில் கைது

ஆவடி: திருநின்றவூர், பெரியார் நகர், கங்கை தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (22). பெயிண்டர். இதற்கிடையில் வாசுதேவன், இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17வயது உடைய மாணவியிடம் பழகிவந்துள்ளார். பின்னர், அவரை திருமண ஆசை காட்டி வாசுதேவன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி  கர்ப்பமானார்.  தகவலறிந்த பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வாசுதேவன் மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாசுதேவனை நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: