கீழ்பென்னாத்தூர், ஏப்.10: கீழ்பென்னாத்தூரில் கோடை வெயிலை சமாளிக்க மருத்துவ குணம் கொண்ட விலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளது.கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கோடையை சமாளிக்கும் வகையில் மருத்துவ குணம் வாய்ந்த விலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து கீழ்பென்னாத்தூர்- அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் திண்டிவனம் சாலை போன்ற பகுதிகளில் தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விலாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.