நாகை, ஏப்.9: நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமான போக்குதான் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். முககவசம் அணியாமல் செல்வோர்கள் மீது அபராதம் என்பது விதிக்கப்படுவது இல்லை. தேர்தல் காலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் வீடுவீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.