நீலகிரியில் 30 பேருக்கு கொரோனா

ஊட்டி, ஏப். 8:  நீலகிரி மாவடத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,816 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 8,598 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 168 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உள்ளது.

Related Stories: