திருவள்ளூர், ஏப்.4: திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கே.சுதாகர் தலைமையிலும், திருவாலங்காடு ஒன்றியத்தில் சக்திவேல் தலைமையிலும் கிராமம், கிராமமாக சென்று தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பேசியதாவது, “திருவள்ளூர் தொகுதியில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வேன். திருவள்ளூர் நகரத்தின் இரண்டு பக்கமும் கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன். திருவள்ளூர் தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுப்பேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு புதியதாக அரசு பஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.