புதுச்சேரி, ஏப். 3: திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பாஜக, அதிமுகவின் திட்டமிட்ட சதி என்றும், வருகிற தேர்தல் பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்கிறது. அதேபோல், அவர்களது அலுவலகங்களில் சோதனை செய்யப்படுகிறது. இது பாஜக மற்றும் அதிமுகவின் திட்டமிட்ட சதி. அரசியல் தலைவர்களை பழிவாங்கும் நோக்கோடு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்ைத சேர்ந்தவர்களுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என மோடி அரசு, சோதனை என்ற பெயரில் இந்த வேலையை செய்து வருகிறது.